திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி

மணிப்பூர் குறித்த விவாதத்தில் தமிழக எம்பி சரமாரி கேள்வி..

News image
தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார்
Updated On :11 மார்ச் 2025, 1:31 pm

DIN

தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியுள்ள நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து மக்களவையில் எம்பிக்கள் இன்று விவாதித்தனர்.

இந்த விவாதத்தில் திமுக சார்பில் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் பேசியதாவது:

”வடகிழக்கில் உள்ள 7 சகோதரிகளில் ஒரு சகோதரி ஒன்றை ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறார்கள். இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி 250க்கும் மேற்பட்டோர் எரித்து கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 60,000 பேர் சொந்த மாநிலங்களிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டு, தேவாலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 15,000 மாணவர்களின் கல்வி பறிபோகியுள்ளது.

இத்தகைய விவாதத்தின்போது, பிரதமர் அவைக்கு வரவேண்டியது அவசியம் இல்லையா? மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் பிரதமர், தன்னை செளகிதார்(பாதுகாவலர்) என்கிறார்.

உக்ரைன் பிரச்னையை தீர்த்துவைக்க முனைப்பு காட்டும் பிரதமர், சொந்த நாட்டில் உள்ள சிறிய மாநிலத்தின் பிரச்னையை தீர்க்க வலுவில்லையா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

கார்ப்ரேட் முதலாளிகளின் இல்ல நிகழ்வுக்கு விரைந்து செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல மனமில்லையா? ஏன் செல்ல மறுக்கிறார்? மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட மறுக்கிறார் என்பதை விளக்க வேண்டும்.

பாஜக அரசின் அரசியல் ஆதாயத்துக்காக குக்கி சமூக மக்களின் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளது. அதனால்தான் வன்முறையை மத்திய அரசு தீர்த்து வைக்காமல் இருக்கிறது.

குக்கி இன பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காணொலியை உலகமே பார்த்ததே, இது எந்த மாதிரியான நாகரீகம்? இதுதான் இரட்டை என்ஜின் அரசின் செயல் திறனா?

தமிழக எம்பிக்களை நாகரீகமற்றவர் என்று மத்திய அமைச்சர் கூறிகிறார். இதுதான் உங்கள் நாகரீகமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.