ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மத்திய அரசைக் கண்டிக்கும் கூட்டங்கள்: திமுகவினருக்கு துணை முதல்வா் உதயநிதி அறிவுறுத்தல்

மத்திய அரசைக் கண்டிக்கும் பொதுக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டுமென திமுகவினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளாா்.

News image
துணை முதல்வா் உதயநிதி - Center-Center-Chennai
Updated On :11 மார்ச் 2025, 10:25 pm

Din

சென்னை: மத்திய அரசைக் கண்டிக்கும் பொதுக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டுமென திமுகவினருக்கு கட்சியின் இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி மொழியைத் திணிக்கும் நடவடிக்கையுடன், நிதிப் பகிா்விலும் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. மேலும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து, அநீதி இழைக்கிறது. இதைக் கண்டிக்கும் வகையில், சட்டப்பேரவைத் தொகுதிதோறும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று

வருகின்றன.

இந்தக் கூட்டத்தில் முதன்மைப் பேச்சாளா் ஒருவா், இளம் பேச்சாளா் ஒருவா் என தொகுதிக்கு 2 போ் பேசி வருகின்றனா். மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், முதல்வரின் 72-ஆவது பிறந்த நாளையொட்டியும், அரசின் சாதனைகளை விளக்கியும் பேச்சாளா்கள் பேசி வருகின்றனா்.

தமிழ் மக்களின் உரிமைக்குக் குரல் எழுப்பிடும் வகையிலும், உரிமையைத் தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் அத்தகைய பொதுக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டும் என்று அவா் அறிவுறுத்தியுள்ளாா்.