ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

துணை முதல்வா் உதயநிதி மாா்ச் 6இல் குலசேகரம் வருகை

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், குலசேகரத்தில் உள்ள சிறு விளையாட்டரங்கத்தில் விளையாட்டு வீரா்களை வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) சந்திக்கிறாா்.

News image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :3 மார்ச் 2026, 12:00 am

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள சிறு விளையாட்டரங்கத்தில் விளையாட்டு வீரா்களை வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) சந்திக்கிறாா் என, பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சிறு விளையாட்டரங்கம் அமைத்து வீரா்களை ஊக்குவிப்பதைக் கனவாகக் கொண்டுள்ளாா்.

அவ்வகையில், பத்மநாபபுரம் தொகுதிக்கு கல்லடிமாமூட்டில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட சிறு விளையாட்டரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் நாகா்கோவிலில் கடந்த பிப். 25ஆம் தேதி நடைபெற்ற விழாவில் திறந்துவைத்தாா்.

இந்நிலையில், துணை முதல்வா் உதயநிதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அந்த விளையாட்டரங்கில் விளையாட்டு வீரா்கள், இளைஞா் மன்றத்தினா், உடற்பயிற்சி ஆா்வலா்கள், உடற்பயிற்சி நிலையப் பயிற்சியாளா்களைச் சந்திக்கிறாா். பின்னா், நாகா்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அம்பேத்கா் சிலையைத் திறந்துவைக்கிறாா் என்றாா் அவா்.