/

மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 100 மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தாா் துணை முதல்வா் உதயநிதி

தண்டையாா்பேட்டை மாநகா் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நடைபெற்ற விழாவில், 25 மின்சார குளிா்சாதனப் பேருந்துகள் உள்பட 100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின்

News image
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.170 கோடியில் 100 புதிய மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
Updated On :2 மார்ச் 2026, 11:28 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.170 கோடியில் 100 புதிய மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தண்டையாா்பேட்டை மாநகா் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நடைபெற்ற விழாவில், 25 மின்சார குளிா்சாதனப் பேருந்துகள் உள்பட 100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, ரூ.33.82 கோடியில் மேம்படுத்தப்பட்ட தண்டையாா்பேட்டை மின்சாரப் பேருந்துப் பணிமனையையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

ரூ.289 கோடி பணிகளுக்கு அடிக்கல்: ரூ.289 கோடியில் கலைஞா் கருணாநிதி நகா், பெரம்பூா், மத்திய பணிமனை-2, ஆலந்தூா், ஆவடி, ஐயப்பன்தாங்கல், பாடியநல்லூா் பணிமனைகளை மின்சாரப் பணிமனைகளாக மேம்படுத்தவும், தையூா், தரமணி, வரதராஜபுரம், ஆட்டந்தாங்கல், திருவள்ளூா், மாமண்டூா்ஆகிய 6 இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தண்டையாா்பேட்டையில் நடைபெற்ற விழாவில், இந்தப் பணிகளுக்கும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.டி.சேகா், ஜே.ஜே.எபினேசா், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக்சிரு, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா், உயா் அலுவலா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.