கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தமிழகத்தில் 14.55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பொருளாதார ஆய்வறிக்கை

தமிழகத்தில் 14.55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக...

News image

வேலைவாய்ப்பு

Updated On :13 மார்ச் 2025, 11:04 am

DIN

தமிழகத்தில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதன் மூலம் 14.55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழக அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

2024ஆம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டு ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 14.55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்வளர்ச்சியைத் தக்கவைப்பதற்கு, தமிழ்நாடு தனது பணியாளர்களுக்குத் தொழில்துறை 4.0 தொழில்நுட்பங்கள் சார்ந்து மறுதிறன் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

2023-24இல், சேவைத் துறை (மூன்றாம் நிலை) யானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக்கூட்டலில் (ஜிஎஸ்விஏ) 53.63% பங்களித்தது; அதற்கடுத்து இரண்டாம் நிலைத் துறை (33.37%), முதன்மைத் துறை (13%) பங்களித்துள்ளன. வளர்ந்த பொருளாதாரங்களைப் போலவே, மாநிலத்தின் இரண்டாம் நிலைத் துறையின் பங்கு 5% அளவில் அதிகரித்தால், வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.

அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட, நகரமயமாக்கப்பட்ட பொருளாதாரமான தமிழ்நாடு, 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. தற்போதைய ஆற்றலுடன், காலநிலை மாற்றம், மக்கள்தொகை மாற்றங்கள், தொழில்நுட்பச் சீர்குலைவு, மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழல்கள் போன்ற சவால்களை வியூகம் சார்ந்த திட்டமிடல் வாயிலாக வெற்றிகரமாக எதிர்கொண்டு தமிழ்நாடு இந்த இலக்கை எட்டும்.

மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியைப் பரவலாக்குவதற்குக் கிராமப்புறத் தொழில்முனைவோரை வளர்த்தெடுப்பதில் தமிழ்நாடு கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல், வேலையில் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவித்தல், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் உள்பட உயர்மதிப்பு உற்பத்தி மற்றும் சேவைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றோடு தமிழ்நாடு அதன் மக்கள்தொகை சார்ந்த அனுகூலங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (ஐடிஇஎஸ்), தளவாடங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளை விரிவுபடுத்துவதற்கான வணிகச் சூழலை உருவாக்கி, குறைகடத்தி (செமிகண்டக்டர்) மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் துறைக்கான கொள்கைகளுடன் தமிழ்நாடு ஏற்கெனவே இந்த வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.