மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வெளிநாடுகளில் தமிழ் புத்தகக் காட்சி!

வெளிநாடுகளில் தமிழ் புத்தகக் காட்சி நடத்தப்படும் என அறிவிப்பு.

News image
தங்கம் தென்னரசு
Updated On :14 மார்ச் 2025, 4:17 am

DIN

வெளிநாடுகளில் தமிழ் புத்தகக் காட்சி நடத்தப்படும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.

YouTube video thumbnail

அப்போது புத்தகக் காட்சி குறித்து அமைச்சர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் புத்தகக் காட்சி நடைபெற்று வருகின்றன. இதனை நாடே வியந்து பார்க்கிறது.

அடுத்த கட்டமாக, வெளிமாநிலங்களின் தலைநகரான தில்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம், மும்பை போன்ற நகரங்களிலும், சீங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் தமிழ் புத்தகக் காட்சி நடத்தப்படும்.

இதற்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.