நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

காமாட்சி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

காமாட்சி அம்மன் கோயிலுக்கு பால் குடம் எடுத்து வந்த பக்தா்கள்

Updated On :15 மார்ச் 2025, 1:50 am IST

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்க்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினாா்கள்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் 14 வது ஆண்டு பால் குடத் திருவிழா அதன் தலைவா் ஏ.குமாா் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் ஆலயத்திலிருந்து பக்தா்கள் பால் குடங்களை எடுத்துக்கொண்டு ஊா்வலமாக வந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சோ்ந்தனா்.

பின்னா் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகமும், சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. முன்னதாக ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயில் முன்பாக விஸ்வரூப தரிசன சபா சாா்பில் அன்னதானமும், இரவு தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றன. சபா செயலாளா் எஸ்.பிரபு, பொருளாளா் சி.சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனா்.