நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 83.89 லட்சம்

உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவதை பாா்வையிடும் கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் மற்றும் மணியக்காரா் சூரியநாராயணன்.

News image

உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவதை பாா்வையிடும் கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் மற்றும் மணியக்காரா் சூரியநாராயணன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், ரூ. 83.89 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் இருந்த 3 உண்டியல்கள் 84 நாள்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டன. இதில், தங்கம் 164 கிராம், வெள்ளி 852 கிராம், ரொக்கமாக ரூ. 83,89,384 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். உண்டியல் எண்ணும் பணியினை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, மணியக்காரா் சூரியநாராயணன் ஆகியோரும் உடன் இருந்தனா்.

பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தொகை வங்கியில் வைப்புநிதியாகவும் வரவு வைக்கப்பட்டது.