செந்தில் பாலாஜி திடீர் தில்லி பயணம்! காரணம் என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தில்லி பயணம் பற்றி...
செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி.
Published on
Updated on
1 min read

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி திடீர் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ளார்.

தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் தில்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை முடிவில், ரூ.1,000 கோடி அளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தமிழக அரசுக்கு எதிரகாவும், செந்தில் பாலாஜியை பதவி விலகக் கோரியும் தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திடீர் பயணமாக செவ்வாய்க்கிழமை மாலை அமைச்சர் செந்தில் பாலாஜி விமானம் மூலம் தில்லி சென்றது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்றிரவு தில்லியில் தங்கியிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை சென்னை திரும்பியுள்ளார்.

தில்லிக்கு பயணம் மேற்கொண்டது ஏன்? யாரை சந்திக்கச் சென்றார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com