கோவை : கோவையிலிருந்து திருப்பதி செல்லும் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், கோவை - திருப்பதி ரயிலில் நவீன எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி வரும் எல்.எச்.பி எனப்படும் அதிநவீன ரயில் பெட்டிகள் நீண்ட தூர அதிவிரைவு ரயில்களுக்கு பொருத்தப்படுகிறது.
சாதாரண ரயில் பெட்டிகளை விட இந்தப் பெட்டிகளில் கூடுதலாக பயணிகள் பயணம் செய்யலாம், மற்ற ரயில் பெட்டிகளை விட எடை குறைந்தவை என்பதால் அதிவேகமாக இயக்க சௌகரியமாக இருக்கும்.
ஒவ்வொரு பெட்டியிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் இணைக்கப்படுவதால் வேகமாக பயணித்தாலும், சரியான இடத்தில் நிறுத்த முடியும். விபத்தின் போது ஒரு பெட்டி, மற்றொரு பெட்டியுடன் மோதி சேதமடையாது. இந்தப் பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது. அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
அத்துடன் சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜர் வசதி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். எல்.எச்.பி. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 80 இடங்களும், ஏ.சி. பெட்டியில் படுக்கை வசதி கொண்ட 72 இடங்களும் இருக்கும்.
இதையும் படிக்க.. கடற்கரை - செங்கல்பட்டு ஏசி ரயில்: வெளியானது உத்தேச அட்டவணை
ஏற்கனவே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த நவீன பெட்டிகள் பொருத்தப்பட்டு உள்ளன. தற்பொழுது கோவை - திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் பொருத்தி இன்று முதல் இயக்கப்பட்டது.
காலை 6:10 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 1.25 மணிக்கு திருப்பதியை சென்றடையும், வாரந்தோறும் செவ்வாய், வியாழன் , வெள்ளி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்களில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
திருப்பதியில் இருந்து இந்த ரயில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு இரவு 10:50 மணிக்கு கோவை வந்தடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீலகிரி மலை ரயிலுக்கான யுனெஸ்கோ அங்கீகார தினம்

இன்றும் நாளையும் 6 மெமு ரயில்களின் சேவை 8 பெட்டிகளுடன் இயக்கம்

சப்தமாக பாடல் கேட்டால்.. மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய தகவல்!

காவேரி விரைவு ரயில்களில் எல்எச்பி பெட்டி இணைப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



