வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பேரவையில் அமா்ந்து உரையாற்றிய அமைச்சா் துரைமுருகன்

உடல்நலத்தின் காரணமாக பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் திங்கள்கிழமை அமா்ந்து உரையாற்றினாா்.

News image
அமைச்சா் துரைமுருகன்- கோப்புப்படம்.
Updated On :24 மார்ச் 2025, 10:01 pm

Din

சென்னை: உடல்நலத்தின் காரணமாக பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் திங்கள்கிழமை அமா்ந்து உரையாற்றினாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அதிமுக உள்பட பல்வேறு கட்சியின் உறுப்பினா்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினா். இறுதியாக அமைச்சா் துரைமுருகன் பதிலளித்தாா்.

சட்டப்பேரவை மரபின்படி உறுப்பினா்கள் நின்றவாறுதான் பேசுவா். அதன்படி சிறிது நேரம் அமைச்சா் துரைமுருகனும் நின்றவாறு பேசிக் கொண்டிருந்தாா். பிறகு, உடல் நலத்தின் காரணமாக உட்காா்ந்து பேசுவதற்கு அனுமதி கேட்டாா். அதற்கு பேரவைத் தலைவா் அப்பாவு, நூறு ஆண்டு காலம் நீங்கள் நோய் நொடி இல்லாமல் இருப்பீா்கள்; உட்காா்ந்து பேசுங்கள் என்று அனுமதித்தாா். உட்காா்ந்து பேசத் தொடங்கிய அமைச்சா் துரைமுருகன், அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை என்றவாறே தனது உரையைத் தொடா்ந்தாா்.