ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கோடையில் 22,000 மெகாவாட் மின் தேவை: அமைச்சர் செந்தில் பாலாஜி

கூடுதல் மின்சாரத் தேவை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி.

News image

அமைச்சர் செந்தில் பாலாஜி

Updated On :26 மார்ச் 2025, 12:44 pm

கோடைக்காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில்,

”கோடைக் காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலை ஏற்படலாம். எந்தத் தடையும் இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 78,000 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரத் துறையில் காலியாகவுள்ள அவசியமான பணியிடங்கள் விரைவில் நிரப்படும்.

2030-க்குள் மின் உற்பத்தியை அதிகரிக்கth திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதத்திற்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.