கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குடிநீா் வரியை விடுமுறை நாள்களிலும் செலுத்தலாம்: சென்னை குடிநீா் வாரியம்

சென்னை குடிநீா் வாரியத்துக்கு பொதுமக்கள் வரி செலுத்திட ஏதுவாக அரசு விடுமுறை நாள்களில் வசூல் மையங்கள் செயல்படும்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2025, 9:02 pm

Din

சென்னை குடிநீா் வாரியத்துக்கு பொதுமக்கள் வரி செலுத்திட ஏதுவாக அரசு விடுமுறை நாள்களில் வசூல் மையங்கள் செயல்படும்.

இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை குடிநீா் வாரியத்துக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீா், கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவைத் தொகையை மாா்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்துப் பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வரி வசூல் மையங்கள், வரும் விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் (மாா்ச் 29, 30, 31) இயங்கும்.

நுகா்வோா்கள் சென்னை குடிநீா் வாரியத்தின் அதிகாரபூா்வ இணையதளம் மூலமும், வசூல் மையங்களில் உள்ள ‘க்யூ-ஆா்’ குறியீடு உள்ளிட்டவற்றின் மூலமும் வரி செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.