விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மாநகராட்சி வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிறு செயல்படும்!

மதுரை மாநகராட்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் மையங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:02 pm

மதுரை மாநகராட்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் மையங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சிக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், புதை சாக்கடை பராமரிப்புக் கட்டணம், தொழில் வரி ஆகிய வருவாய் இனங்கள், மாநகராட்சி கடைகளுக்கான வரியில்லாத இனங்கள், வருவாய்ப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் வரி வசூல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் எளிதாக வரி செலுத்தும் வகையில் வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட உள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி, வரியில்லா இனங்களை நிலுவையின்றி உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் வளா்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றாா் அவா்.