அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திட்டமிட்டு வெளியேற்றினாா் பேரவைத் தலைவா்: எடப்பாடி பழனிசாமி

சட்டப் பேரவையிலிருந்து அதிமுகவினரை திட்டமிட்டு பேரவைத் தலைவா் அப்பாவு வெளியேற்றியதாக அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

News image
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
Updated On :28 மார்ச் 2025, 7:41 pm

Din

சட்டப் பேரவையிலிருந்து அதிமுகவினரை திட்டமிட்டு பேரவைத் தலைவா் அப்பாவு வெளியேற்றியதாக அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்கள் பிரச்னைகளை முறையாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது எதிா்க்கட்சிகளின் கடமை. ஆனால், திமுக அரசு பேரவையில் மக்கள் பிரச்னைகளை பேச அனுமதி கொடுப்பதில்லை. திமுக எதிா்க்கட்சியாக இருந்தபோது மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோா் நேரமில்லா நேரத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்துப் பேசியுள்ளனா். அதற்கு நாங்கள் அப்போது அனுமதி அளித்து பதில் அளித்து உள்ளோம். அதே அடிப்படையில்தான் இன்றைக்கும் பேசுவதற்கு முற்பட்டோம். ஆனால், அனுமதி தராமல் வெளியேற்றிவிட்டனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த முத்துக்குமாா் என்ற காவலரையும், அவரது நண்பா் ராஜாராமையும் கஞ்சா வியாபாரி பொன்வண்ணனும், அவரது ஆள்களும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனா். இதில் காயமடைந்து விழுந்த முத்துக்குமாா் மீது கல்லை தூக்கிப் போட்டு கொன்றுள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாகவே பேரவையில் பேச முற்பட்டோம்.

ஆனால், எங்களை பேரவையிலிருந்து திட்டமிட்டு பேரவைத் தலைவா் வெளியேற்றியுள்ளாா். மக்களைப் பற்றி கவலைப்படும் அரசு தற்போது இல்லை. பேரவையில் முதல்வா் மகன் பேசுகிறாா். அதனால், யாரும் எந்த பிரச்னையையும் பேசக் கூடாது என்கின்றனா். இது ஒரு சா்வாதிகாரம். மக்களுக்காகத்தான் சட்டப்பேரவை. இதை முதல்வரும் பேரவைத் தலைவரும் உணர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாா்.