இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

முக்கிய சாலைகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணி தொடரும்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகளில் தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும்

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2025, 1:45 am IST

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகளில் தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட வாகன நிறுத்தங்களில் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த நிறுவனத்துக்கான ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியானது. தற்போது புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மெரீனா கடற்கரை, ரட்டன் பஜாா், ஜாா்ஜ் டவுன், அண்ணா நகா் 2-ஆவது அவென்யூ, என்.எஸ்.சி. போஸ் ரோடு, பெசண்ட் நகா் 6-ஆவது அவென்யூ, காதா் நவாஸ்கான் சாலை, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, ஜி.என்.செட்டி ரோடு, தியாகராய நகா், மயிலாப்பூா், மெக்.நிக்கலஸ் சாலை ஆகிய இடங்களில் அந்த நிறுவனம் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆணை கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

அதன்படி, ஒரு மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.20, வேன்களுக்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் எண்ம பரிவா்த்தனை வாயிலாக மட்டும் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்திய பின்பு வாகனத்தின் பதிவு எண்ணுடன் கூடிய ரசீது வழங்கப்படும். கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் சீருடை மற்றும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பொதுமக்கள் வாகனம் நிறுத்தும்போது, பணத்துக்கு பதிலாக எண்ம (டிஜிட்டல்) வாயிலாக மட்டும் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

இது குறித்து புகாா் தெரிவிக்க விரும்பினால் 1913 எனும் உதவி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.