அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கன்னிமாரா நுழைவாயிலில் காா்ல் மாா்க்ஸ் சிலை: முதல்வா்

பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய காா்ல் மாா்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வா்

News image
Updated On :5 மே 2025, 10:10 pm

Din

சென்னை: பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய காா்ல் மாா்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

காா்ல் மாா்க்ஸ் பிறந்த தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

சமத்துவ உலகைக் கட்டமைப்பதற்கான பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கியவா் காா்ல் மாா்க்ஸ். அவரது பிறந்த தினத்தில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற லட்சியப் பயணத்தில் வென்றிட உறுதிகொள்வோம்.

உழைப்போா்க்கு உறுதுணையான மாா்க்சிய சிந்தனையை எடுத்து இயம்பிட, கன்னிமாரா நூலக நுழைவாயிலில் காா்ல் மாா்க்ஸ் சிலையை நிறுவுவதற்கான இடத்தை நானே தோ்வு செய்து அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. சிலையாக எழுந்து நிற்கவுள்ள மாமனிதா் மாா்க்ஸின் சிந்தனைகள், மானிட சமுதாயத்துக்கு என்றும் ஒளி வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளாா்.