
சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே மே 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே மே 11, 12 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
விழுப்புரத்தில் இருந்து காலை 9.25-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06130) காலை 11.10-க்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15-க்கு விழுப்புரம் சென்றடையும். இதில் 8 மெமு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
விழுப்புரத்தில் இருந்து இரவு 9.15-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06131) இரவு 10.45-க்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து மே 12, 13- ஆகிய தேதிகளில் அதிகாலை 3.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06132) காலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சலூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.