நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முன்கூட்டியே வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாக...

News image

கோப்புப்படம்.

Updated On :6 மே 2025, 11:05 am IST

தமிழகத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்பே மே 8 ஆம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 தொடங்கி 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவா்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் அண்மையில் நிறைவு பெற்றன.

Story image

இதில், 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபட்டனர். அதன்பின் மதிப்பெண் பதிவேற்றம் உள்பட பணிகளை முடித்து தேர்வு முடிவுகள் மே 9-இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு நாள் முன்பே மே 8 ஆம் தேதியே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.