அந்த வகையில் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த வழக்கில் தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க. என உரிமை கோருவதில் நியாயம் இல்லை, சான்றுகள் வலுவாக இருந்தது. குறிப்பாக செல்போன்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் பதிவு செய்த தடையங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தது. அதுவே அவர்களால் தப்பிக்க இயலவில்லை. குற்றச்சாட்டிலிருந்து அவர்களால் மீள முடியாத அளவிற்கான ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள் என்பதே உண்மை, அந்த ஆதாரங்கள் தான் இந்த தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடையாங்களாக இருந்து இருக்கிறது, இதில் யாரும் உரிமை கோருவதில் அர்த்தமில்லை என்றார்.