சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று(மே 25) அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அம்மாப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையொன்று இயங்கி வருகிறது. இங்கு திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் பட்டாசு தயாரிப்பதற்காக மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறை தரைமட்டமானது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் வெடி விபத்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் மடைந்தனர்.

அதிகாலை நேரம் என்பதால் விபத்து நடந்த இடத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com