டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்திய அரசின் விவகாரங்கள் முடிவெடுக்கப்படுவது தில்லியிலா? வாஷிங்டனிலா? - ப.சிதம்பரம்

திருச்சியில் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு...

News image
கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம்.
Updated On :26 மே 2025, 6:38 am

DIN

இந்திய அரசின் கொள்கைகள் வகுக்கப்படுவது தில்லியிலா?வாஷிங்டனிலா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானுடனான சண்டையில் நமது ராணுவ வீரர்களின் துணிச்சலையும் சேவையையும் போற்றும் விதமாகவும், நம் வீரர்கள் நாட்டிற்கு ஆற்றிய மகத்தான சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று(மே 25) மாலை நடைபெற்றது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இதில் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் பேசிய அவர், "நம்முடைய ராணுவ வீரர்களைப் பற்றி விஞ்ஞானிகளைப் பற்றி நினைக்கும்போது நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். அதேநேரத்தில் அரசின் நிலைப்பாடு கவலையளிக்கிறது. அரசின் மௌனம் நமக்கு மிகவும் கவலையளிக்கிறது.

இந்திய அரசின் கொள்கைகளை வகுப்பது, முடிவெடுப்பது தில்லியிலா, வாஷிங்டனிலா என்று கேள்வி எழுகிறது. பிரதமர் பேசுவதற்கு மாறாக, ராணுவ அமைச்சர் பேசுவதற்கு மாறாக, வெளியுறவு அமைச்சர் பேசுவதற்கு மாறாக அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் பேசுகிறார்கள். இதெல்லாம் கவலை அளிக்கிறது.

ராணுவத்திற்கு சல்யூட் போடும் அதேநேரத்தில் இந்த கேள்விகளை எழுப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நாடாளுமன்றத்திலோ அல்லது செய்தியாளர் சந்திப்பிலோ வந்து, 'நான் போர் தொடுத்தேன், அவர்கள் தாக்கினார்கள், கடுமையான பதில் தாக்குதல் நடந்தது, வெற்றி பெற்றுவிட்டோம், பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டோம். ஆனால் நான் போரை விரும்பவில்லை, அதனால் தன்னிச்சையாக இந்திய மக்களின் நலன் கருதி போரை நிறுத்துகிறேன்' என்று பிரதமர் சொல்லியிருந்தால் அவருக்கும் சல்யூட் அடித்திருக்கலாம். ஆனால் அவர் சொல்லவில்லை. போரை நிறுத்தினேன் என்று இந்திரா காந்தி போன்று சொல்லியிருந்தால் பெருமைப்பட்டிருக்கலாம். போரை நிறுத்தியவர் அமெரிக்க அதிபர். அதுதான் எங்களுக்கு கவலையளிக்கிறது" என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.