புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கம்!

சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

சென்னை பெருநகர மாநகராட்சி...

(கோப்புப்படம்)

Updated On :26 மே 2025, 5:26 am

DIN

சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பேரிடர் ஆணையத்தில் சென்னை மாநகராட்சி, சென்னை காவல்துறை, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நீர்வளத்துறை உள்ளிட்ட துறை இடம்பெற்றுள்ளது.

தலைவராக சென்னை மாநகராட்சி ஆணையர், உறுப்பினர்களாக சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி துணை ஆணையர்கள், மாநகர சுகாதாரத்துறை அலுவலர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.