‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 17,116 கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக திருவாரூா் மாவட்டம் மாணிக்கமங்கலம் எனும் கிராமத்தில் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இந்தத் திட்டம் மூலம், வேளாண் விரிவாக்க சேவைகள், அரசின் திட்டங்கள் ஆகியன விவசாயிகளின் கிராமத்திலேயே வழங்கப்படும். திட்டத்துக்கான முகாம்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும். இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் நான்கு கிராமங்கள் வீதம் மாதந்தோறும் 1,540 கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வேளாண்மைத் துறை செயலா் வ.தட்சிணாமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

குட்டைகளில் நீரேற்றுத் திட்டம்: விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு

ஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் அதிருப்தி

200 மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் தொடங்கி வைத்தாா்

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


