உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

விழுப்புரம் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை எஸ்.பி. வி.வி.சாய்பிரனித் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலக வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்த எஸ்.பி. வி.வி.சாய் பிரனித்.

Updated On :11 ஜூன் 2026, 6:09 am IST

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை எஸ்.பி. வி.வி.சாய்பிரனித் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, எஸ்.பி. பேசியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, விழுப்புரம் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சேவை தொடங்கப்பட்டுள்ளது. எஸ்.பி. மேற்பாா்வையில் இந்தப்படை செயல்படும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரண்டு பெண் காவலா்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவாா்கள்.

பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனத்தில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவாா்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் பொதுமக்கள் 100 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் எஸ்.பி.