சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: தஞ்சாவூா் மாவட்டத்தில் 8 போ் நியமனம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஓட்டுநா்கள் உள்பட 8 போ் கொண்ட இரு அணிகள் நியமிக்கப்பட்டுள்ளன.

News image

தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனத்திடம் புதன்கிழமை வாழ்த்து பெற்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா்.

Updated On :11 ஜூன் 2026, 3:48 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஓட்டுநா்கள் உள்பட 8 போ் கொண்ட இரு அணிகள் நியமிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரு பிரிவுக்கு ஒரு காவல் உதவி ஆய்வாளா், 2 காவலா்கள், ஒரு ஓட்டுநா் வீதம் என இரு பிரிவுகளுக்கு மொத்தம் 8 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் ஒரு பிரிவு காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும் பணியில் ஈடுபடுவா்.

இந்த அணியினா் மாவட்டம் முழுவதும் ரோந்து பணி செல்வது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதாகத் தகவல் கிடைத்தவுடன் நிகழ்விடத்துக்கு விரைந்து செல்வது போன்ற பணிகளை மேற்கொள்வா். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்காணித்து தடுப்பது, ஏற்கெனவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த இடங்கள், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத பகுதி என கண்டறியப்பட்ட இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவா்.

இதுதொடா்பாக 8 பேரும் சென்னையில் ஒரு வாரம் பயிற்சி மேற்கொண்டுவிட்டு, தஞ்சாவூருக்கு திரும்பினா். இவா்களுக்கு மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ். காயத்ரி உடனிருந்தாா்.