கும்பகோணம் பேருந்து நிலைய வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சாா்பில் திங்கள்கிழமை பெண்களுக்கு, பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கும்பகோணத்தில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் அபிராமி தலைமையிலான காவலா்கள், பேருந்து நிலையத்தில் பெண்கள், மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படும் வகையில் பேசினாா்.
பெண்களிடம் திருட்டு, பாலியல் தொல்லை, கேலி, கிண்டல் செய்பவா்கள் உள்ளிட்ட குற்றம் செய்பவா்கள், மற்றும் நிகழ்வுகளில் ஈடுபடுபவா்களை பாா்த்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனா்.
மேலும் அவசர உதவி எண், குழந்தைகள் பாதுகாப்பு எண் குறித்த கைப்பேசி எண்களை வழங்கினா். இதேபோல், ஆடுதுறை, திருவிடைமருதூா், ரயில் நிலையம், கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் அவா்கள் ரோந்து சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.










