இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

அத்துடன் மீனவர்களின் 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப் படகையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்கு பிறகு மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் முடிவு கிட்டியதாய் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நவ.8 வரை மழைக்கு வாய்ப்பு!

Summary

The Sri Lankan Navy arrested 35 fishermen who had gone fishing from Tamil Nadu and Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com