அடுத்த 2 நாள்களுக்கு சென்னை, புறநகரில் பலத்த மழை!

அடுத்த 2 நாள்களுக்கு சென்னை, புறநகரில் பலத்த மழைக்கு வாய்ப்பு தொடர்பாக...
அடுத்த 2 நாள்களுக்கு சென்னை, புறநகரில் பலத்த மழை!
Published on
Updated on
1 min read

அடுத்த 2 நாள்களுக்கு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை தொடர்பான விவரங்களைக் கணித்து சமூக வலைதளங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீன் ஜான், மழை நிலவரம் தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று(நவ. 9) பெய்த மழைக்குப் பிறகு, இன்றும்(நவ. 10) தென் மாவட்டங்களில் மழை தொடரும்.

கிழக்கு காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டெல்டா மாவட்டங்கள் முதல் புதுவை கடற்கரை வரை நாளை முதல் மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நவ. 11, 12 ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறைந்து, நவ. 18, 19 தேதிகளில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Heavy rain likely in Chennai and its suburbs for the next 2 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com