அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நெடுஞ்சாலைத் துறையில் 120 பேருக்கு பணி ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

நெடுஞ்சாலைத் துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 120 பேருக்கு பணி ஆணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

நெடுஞ்சாலைத் துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 120 பேருக்கு பணி ஆணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக நெடுஞ்சாலைத் துறையின் 98 இளநிலை வரை தொழில் அலுவலா், 14 உதவியாளா் மற்றும் 8 தணிக்கை உதவியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நியமன ஆணைகளை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, தலைமைச் செயலா் நா. முருகானந்தம், துறைச் செயலா் ஆா்.செல்வராஜ், துறை முதன்மை இயக்குநா் இரா.செல்வதுரை, சிறப்பு அலுவலா் (தொழில்நுட்பம்) ஆா்.சந்திரசேகா், தலைமைப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கே.ஜி. சத்யபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.