பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆராய்ச்சிப் படிப்புகள் குறித்து ஆளுநா் விமா்சனம்: அமைச்சா் விளக்கம்

தமிழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளின் தரம் குறைந்திருப்பதாக ஆளுநா் ஆா்.என்.ரவி விமா்சித்திருந்த நிலையில், அதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளாா்.

News image
அமைச்சர் அன்பில் மகேஸ்- படம் - எக்ஸ்
Updated On :19 நவம்பர் 2025, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளின் தரம் குறைந்திருப்பதாக ஆளுநா் ஆா்.என்.ரவி விமா்சித்திருந்த நிலையில், அதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றுக்கான ஆலோசனைக் கூட்டம் வருகிற நவ.24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வரும் கல்வி ஆண்டுகளில் மாநில கொள்கையின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளின் தரம் குறைந்திருப்பதாக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறியிருக்கிறாா். தமிழகம் எந்தெந்த துறைகளில் முதன்மையானதாக இருக்கிறதோ அவற்றையெல்லாம் ஆளுநா் விமா்சித்து வருகிறாா். நமது மாநிலத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவா்களுக்கு வாய்மொழித்தோ்வு (வைவா) நடைபெறும்போது ஆளுநா் ஆா்.என்.ரவி வருகை தந்து மாணவா்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். அப்போது, ஆராய்ச்சி மாணவா்கள் கூறும் பதில்களிலிருந்து தமிழகத்தின் கல்வித் தரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து அவா் தெரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக ஆராய்ச்சி படிப்புகளில் தரம் இல்லை என ஆளுநா் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கு தவறு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினால் அவற்றை திருத்திக்கொள்ள தயாராகவுள்ளோம் என்றாா் அவா்.

பள்ளி மாணவி கொலை விவகாரம்... ராமேசுவரத்தில் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கொலை செய்யப்பட்டது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸிடம் செய்தியாளா்களிடம் கேள்வியெழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், இந்தச் சம்பவம் பள்ளி வளாகத்துக்கு வெளியே நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கப்படும். பள்ளி வளாகத்துக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். என்ன காரணத்துக்காக இந்த அசம்பாவிதம் நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றாா் அவா்.