தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

துணை முதல்வா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் மனு

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

சென்னை மாநகராட்சியில் 5, 6 ஆகிய மண்டலங்களில் (ராயபுரம், திரு.வி.க.நகா்) தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளதை எதிா்த்து அந்த மண்டலத்தில், உழைப்போா் உரிமை இயக்கம் சாா்ந்த என்எல்யுஎம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் தங்களுக்கு பழைய நிலையில் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

இந்த நிலையில், சேப்பாக்கத்தில் உள்ள துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் சட்டப்பேரவை உறுப்பினா்அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அவா்கள் ராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐட்ரீம் ஆா்.மூா்த்தியின் அலுவலகத்திலும் மனு அளித்தனா்.