தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை(நவ. 24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, தென்காசி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ. 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும்  மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(நவ.23) கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மிககனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ள  நிலையில், தமிழ்நாடு அரசு  உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Summary

Holiday declared for schools in Thoothukudi district tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com