விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காஞ்சிபுரம் பெண்கள் காப்பகத்திலிருந்து தப்பித்த 4 சிறுமிகள்!

காஞ்சிபுரம் பெண்கள் காப்பகத்திலிருந்து 4 சிறுமிகள் தப்பிச் சென்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :29 நவம்பர் 2025, 6:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில், தூங்கிக் கொண்டிருந்த பாதுகாவலரிடம் இருந்து சாவியை எடுத்து கேட்டை திறந்து நான்கு சிறுமிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பவம் பற்றி அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் பெண்கள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் தாத்திமேடு பகுதியில், தமிழ்நாடு அரசு சார்பில் குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவை துறை சார்பாக அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி, கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 12 மணி அளவில் மூன்று விடுதி காப்பாளர்களும் அங்குள்ள பெண் குழந்தைகளிடம் பேசிவிட்டு இரவு பூட்டிக்கொண்டு சாவியை அங்கு பணிபுரியும் ஷோபனா என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் ஷோபனாவிடம் இருந்து சாவியை நான்கு பெண்கள் மெதுவாக எடுத்து கேட்டை திறந்து காப்பகத்தின் பின் பக்கம் உள்ள மதில் சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த நான்கு பெண்களில் மூன்று பேர் குன்றத்தூர் பகுதியையும் ஒருவர் காஞ்சிபுரம் பகுதியையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அரசு அலுவலர் மற்றும் காஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதில் சுவர் மீதிருந்த இரும்பு வலை துருப்பிடித்து இருந்ததால் அதனை நீக்கிவிட்டு புதியதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, இரும்பு வலையை அகற்றிய நிலையில் தற்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.