12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் தலைமறைவு! இரு தனிப்படைகள் தேடல்

தவெகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமறைவானதால், அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்

Published On :

நாமக்கல் மாவட்ட தவெக செயலாளர் சதீஷ்குமார் தலைமறைவானதால், அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல்லில் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தவெக செயலாளர் சதீஷ்குமாரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தக்வல் வெளியாகியுள்ளது.

நாமக்கல்லில் செப். 27 ஆம் தேதியில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தின்போது, தனியார் மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தியதாக தவெகவின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதனையடுத்து, தன்னை காவல்துறையினர் கைது செய்யக் கூடும் என்று முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இருப்பினும், அவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், சதீஷ்குமார் தலைமறைவானதாகவும், அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Summary

Namakkal TVK District Secretary absconding 2 Spl Forces formed to arrest him

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.