தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் தலைமறைவு! இரு தனிப்படைகள் தேடல்

தவெகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமறைவானதால், அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்

News image
Updated On :4 அக்டோபர் 2025, 7:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

நாமக்கல் மாவட்ட தவெக செயலாளர் சதீஷ்குமார் தலைமறைவானதால், அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல்லில் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தவெக செயலாளர் சதீஷ்குமாரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தக்வல் வெளியாகியுள்ளது.

நாமக்கல்லில் செப். 27 ஆம் தேதியில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தின்போது, தனியார் மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தியதாக தவெகவின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதனையடுத்து, தன்னை காவல்துறையினர் கைது செய்யக் கூடும் என்று முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இருப்பினும், அவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், சதீஷ்குமார் தலைமறைவானதாகவும், அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Summary

Namakkal TVK District Secretary absconding 2 Spl Forces formed to arrest him

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.