ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால வலுப்பெற்ற புயல் சின்னம்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால வலுப்பெற்ற புயல் சின்னம்.
Published on
Updated on
1 min read

வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்தது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வட தமிழக - தெற்கு ஆந்திரா கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்துக்குள் நெருங்கும் என்று கூறப்படுகிறது.

இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலோர மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The India Meteorological Department has reported that the cyclone formed in the Bay of Bengal has strengthened due to a deep depression.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com