/

அதிமுக தலைமைக்கு 10 நாள் கெடு விதிக்கவில்லை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுக ஒன்றிணைவது குறித்து முன்னாள அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

News image
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்- IANS
Updated On :23 அக்டோபர் 2025, 3:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சித் தலைமைக்கு பத்து நாள்கள் கெடு விதிக்கவில்லை எனவும் ஊடகங்கள்தான் அதனை தவறாக போட்டுவிட்டனர் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவையிலிருந்து விமானம் மூலம் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், விரைவில் நல்லது நடக்கும் என்றார்.

மேலும், இன்று நீங்கள் பங்கேற்க இருக்கும் திருமண நிகழ்ச்சியில் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”இதுவரை ஏதும் இல்லை, நல்லதே நடக்கும்” என பதிலளித்த அவரிடம், அதிமுக ஒன்றிணைய பத்து நாள் கெடு விதித்தீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு, ”நான் பத்து நாள் கெடு விதிக்கவில்லை, பத்து நாள்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும், ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தேன்.

ஆனால் ஊடகங்கள்தான் தவறாகப் போட்டுவிட்டனர்” என பதிலளித்தார்.

ராணுவ கட்டுப்பாடுடன் இருந்த கட்சி இப்போது இப்படி ஆகிவிட்டதே என்ற கேள்விக்கு, ”அது உங்கள் கருத்து” என்று பதிலளித்துப் புறப்பட்டார்.

summary

Former Minister Sengottaiyan explains about AIADMK merger.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.