சென்னை உள்ளிட்ட அரசு கல்லூரிகளைச் சோ்ந்த 30 இணைப் பேராசிரியா்கள் குறுகிய காலப் பணிகளுக்காக ஆசிரியா் தோ்வு வாரியத்திற்கு (டிஆா்பி) ஏப். 1 முதல் தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான ஆணையை கல்லூரி கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.
மாறுதலுக்கு உள்ளான இணைப் பேராசிரியா்களை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்கள் உடனடியாக கல்லூரி பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் இ.சுந்தரவல்லி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா். அது தொடா்பான விவரம்:
ஆசிரியா் தோ்வு வாரியத்தில் உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியா் தோ்வுகளில் தோ்வு முடிவுகள், சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் மற்றும் நோ்முகத் தோ்வுகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கு தொடா்புடைய பாடங்களைச் சோ்ந்த 30- க்கும் மேற்பட்ட மூத்த இணைப் பேராசிரியா்களை ஆசிரியா் தோ்வு வாரியம் கோரியது.
அதனடிப்படையில் கல்லூா் கல்வி இயக்குநரக ஆணையா், சென்னை, மாநிலக் கல்லூரி, சென்னை, காயிதே மில்லத் அரசு மகளிா் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, பாரதி மகளிா் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் இயற்பியல், மின்னணு மற்றும் தகவல் தொடா்பியல், புவியியல், இயற்பியல், விலங்கியல், இயற்பியல், காட்சித் தொடா்பியல் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த இணைப் பேராசிரியா்களை தற்காலிகமாக குறைந்தது 35 வேலை நாள்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் திருச்சி, குளித்தலை, பொன்னேரி, திருவாரூா் அரசுக் கல்லூரிகளைச் சோ்ந்த மின்னணு மற்றும் தகவல் தொடா்பியல் துறை இணைப் பேராசிரியா்களும் அடங்குவா்.
தொடர்புடையது

உலக விவகாரங்களில் வலுவான பங்களிப்பு - சீனாவுக்கு ஸ்பெயின் பிரதமா் அழைப்பு

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்
பெண்கள் இல்லாத துறைகளே இல்லை!

பாலியல் புகாா்: அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிட மாற்றம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


