ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

சென்னையில் 6-8 நாள்களுக்கு வெப்ப அலை! அதிக நேரம் வெய்யிலில் இருக்க வேண்டாம்!

சென்னையில் 6-8 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் அதிக நேரம் வெய்யிலில் இருக்க வேண்டாம் என அறிவுரை

News image

வெப்ப அலை

Updated On :1 ஏப்ரல் 2026, 12:05 pm IST

கோடைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் சென்னையில் 6 - 8 நாள்களுக்கு வெப்ப அலை வீசுக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை சென்னை மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் கடுமையான வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்றும், இதனால் மக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இந்த இரண்டு மாதங்களும் வெப்பம் அதிகரித்து காணப்படும், இடையே ஓரிரு இடங்களில் மழை பெய்து, வெப்பநிலைக் குறையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், ஆங்காங்கே தேர்தல் பிரசாரங்களும் சூடுபிடித்துள்ளனர். இந்த நிலையில்தான், கோடை வெப்பம் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மக்கள் அதிக நேரம் வெய்யிலில் இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

கோடைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகம் முழுவதும் ஏப்ரல் - ஜூன் மாதம் வரை அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவை விட அதிகமாகவே இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலையும் அதிகரித்தே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கத்தை விட, இந்த மாதங்கள் சற்று வெப்பம் அதிகரித்தே காணப்படும். மக்களுக்கு வெப்பம் தொடர்பான அசௌகரியங்கள் ஏற்படும். வடக்கு மற்றும் கடற்கரையோர மாவட்டங்களில் வெப்ப அலைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. மக்கள் எப்போதும் தண்ணீர் குடித்து, நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், வெய்யிலில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்கவும் அவ்வப்போது வானிலை ஆய்வு மைய அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் பகல் நேர சராசரி வெப்ப அளவு 34.7 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் நீடிக்கும், அதிகபட்ச வெப்ப அளவு 37.3 டிகிரி செல்சியஸ் எனவும் 40 டிகிரியை எட்டும்போது அது வெப்ப அலை என அழைக்கப்படும், ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 முதல் 8 நாள்கள் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.