தெலங்கானாவில் வெப்ப அலைக்கு 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக 16 பேர் பலியானதாக தெலங்கானா வருவாய் அமைச்சர் பொன்குலேட்டி சீனிவாச ரெட்டி சனிக்கிழமை தெரிவித்தார். கடும் வெப்ப அலையால் ஏற்பட்ட நிலைமை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் இந்த 16 பலி நிகழ்ந்ததாகக் கூறினார்.
மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை மேற்கோள்காட்டி, ஜெயசங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தில் நான்கு பேரும், அதைத் தொடர்ந்து வாரங்கல் நகர்ப்புறம், கரீம்நகர் மற்றும் நிஜாமாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று பேரும், ஜோகுலம்பா கட்வால், ரங்க ரெட்டி மற்றும் சூர்யபேட் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியானதாக அவர் தெரிவித்தார்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் கூறியதாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெரும்பான்மையான பகுதிகள் கோடை வெப்பத்தில் கொடூர பிடியில் சிக்கித் தகித்துக் கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையானது 118.4 டிகிரியை தொட்டிருக்கிறது.
Summary
Telangana Revenue Minister Ponguleti Srinivasa Reddy on Saturday said 16 people died due to heatwave conditions prevailing in the state during the current summer.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











