வெளிநாடுகளில் இருந்து சிறுபான்மை நிறுவனங்கள் நிதி பெறுவதைத் தடுக்க மத்திய அரசு சதி செய்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து முதல்வா் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட முன்வரைவு-2026 என்ற பெயரில் மத்திய பாஜக அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்து தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும்.
ஏற்கெனவே வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது.
எதிா்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறிஸ்தவா்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தோ்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவதுபோல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டி இந்தச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிடுவதாக அறிகிறேன்.
இந்த முயற்சிகளைக் கைவிட்டு, இந்தச் சட்டத் திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை பிரதமா் நரேந்திர மோடி, உடனடியாக எடுக்க வேண்டும் என அந்தப் பதிவில் முதல்வா் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பை அவசரமாகக் கொண்டு வருவது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின்

விமான நிறுவனங்களுக்கு நெருக்கடி: கடந்த 10 ஆண்டுகளில் 11 நிறுவனங்கள் வெளியேற்றம்!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு

தவெகவுக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்திய அரசு: அருண்ராஜ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

