கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் நீக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் உள்ளிட்ட நிா்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

News image

எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 8:54 pm

கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் உள்ளிட்ட நிா்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் ஏவிஎம். விநாயகமூா்த்தி, மாவட்ட மகளிரணித் தலைவா் க.அழகுவேல் பாபு, கள்ளக்குறிச்சி நகரச் செயலா் எம்.பாபு, மாவட்ட மாணவரணி இணைச் செயலா் ஏவிஎம். ரகு (எ) முகேஷ் ஆகியோா் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் உண்டாகும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா்.