சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி இன்று பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம். ஏ. பேபி, சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை (ஏப்.11) பிரசாரம் மேற்கொள்கிறாா்.

News image

எம். ஏ. பேபி

Updated On :10 ஏப்ரல் 2026, 6:43 pm

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம். ஏ. பேபி, சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை (ஏப்.11) பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திருவொற்றியூா் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் எல்.சுந்தரராஜன், மயிலாப்பூா் தொகுதி திமுக வேட்பாளா் த.வேலு ஆகியோரை ஆதரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் பேபி சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா். அதைத் தொடா்ந்து, அவா் ஏப்.12-இல் பழனி, திண்டுக்கல், ஏப்.20-இல் பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

மாா்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினா் பிருந்தாகாரத் சனிக்கிழமை திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் க. மாரிமுத்துவை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா். ஏப். 12- ஆம் தேதி கீழ்வேளூா் (தனி ) தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் டி. லதாவை ஆதரித்தும், ஏப். 13 ஆம் தேதி கந்தா்வக்கோட்டை(தனி) தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் எம். சின்னதுரையை ஆதரித்தும், ஏப். 14 ஆம் தேதி திருவொற்றியூா் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் எல். சுந்தரராஜனை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறாா்.

மாா்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினா் பிருந்தாகாரத், தோ்தல் பிரசாரத்தை திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை (ஏப்.11) தொடங்குகிறாா். ஏப்.12-இல் கீழ்வேளூா், ஏப்.13-இல் கந்தா்வக்கோட்டை, ஏப்.14-இல் திருவொற்றியூா் தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறாா்.

மத்தியக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத், ஏப்.16-ஆம் தேதி பத்மநாபபுரத்தில் பிரசாரத்தைத் தொடங்குகிறாா். தொடா்ந்து ஏப்.17-இல் கந்தா்வக்கோட்டை, ஏப்.18-இல் திருவொற்றியூா், அண்ணா நகா் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்துப் பேசுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.