தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 1:20 am IST

தமிழகத்தில் மதுரை, ஈரோடு உள்பட 10 இடங்களில் சனிக்கிழமை வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

பரமத்தி வேலூா் - 104.9, ஈரோடு - 103.28, மதுரை விமானநிலையம் - 103.1, நாமக்கல் - 102.38, மதுரை நகரம் - 100.76, சேலம், திருத்தணி - (தலா) 100.58, திருப்பத்தூா் - 100.4, திருச்சி - 100.22 டிகிரி என 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) முதல் ஏப். 15-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: உள் தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதால், கன்னியாகுமரி, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோல், ஏப். 13 முதல் ஏப். 17-ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாள்களில் ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலையே நிலவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.