இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திமுக எம்எல்ஏ, நெல்லை மேயா் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி மனு

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :14 ஏப்ரல் 2026, 4:23 am IST

அரசு இயந்திரம், அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தி, ரூ.3 கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் பாளையங்கோட்டை எம்எல்ஏ, திருநெல்வேலி மேயா், ஆணையா் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுடலைக்கண்ணு என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011-ஆம் ஆண்டு, பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப் கண்டிகைபேரி கிராமத்தில் 3 ஏக்கா் நிலத்தை வாங்கியிருந்தாா்.

எம்எல்ஏ-வான பிறகு எந்த ஒப்புதலும் பெறாமல் அந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, விற்பனை செய்து வருகிறாா். அந்த நிலத்தின் விலையை அதிகரிப்பதற்காக மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் இல்லாத அந்த நிலத்தில் புதைச் சாக்கடை, குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அரசு இயந்திரம் மற்றும் அரசு நிதியை அதிகார துஷ்பிரயோகம் செய்து ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியுள்ளனா். எனவே, எம்எல்ஏ அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் ராமகிருஷ்ணன், ஆணையா் மோனிகா, சாா் பதிவாளா் உதுமான் ஆகியோருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடா்பாக சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சிபிஐக்கு புகாா் அளித்தேன். இந்த புகாரின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.