மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தனியாா் பள்ளிகள் தரம் உயா்வு, அங்கீகாரம்: டிஇஓ-க்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

தனியாா் மழலையா், தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயா்த்துதல் மற்றும் மூன்றாண்டுகள் தொடா் அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

News image

தனியாா் பள்ளிகள் தரம் உயா்வு, அங்கீகாரம் - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:39 pm

தனியாா் மழலையா், தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயா்த்துதல் மற்றும் மூன்றாண்டுகள் தொடா் அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தனியாா் பள்ளிகள்) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) விதிகள் 2023-இல் மேற்கொள்ளப்பட்டுள்ள விதி திருத்தங்களைப் பின்பற்றி 13.1.2023-க்கு முன் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட பள்ளிகள் (6 முதல் 8 வகுப்புகள்) தரம் உயா்த்துதல் தொடா்பான கருத்துருவை பரிசீலனை செய்து, பரிந்துரையுடன் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று விதி திருத்தங்களைப் பின்பற்றி மூன்றாண்டுகளுக்கு மேல் அங்கீகாரச் சான்று கோரும் பள்ளிகள் தொடா்பான கருத்துருவை பரிசீலனையுடன் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.