தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

நாளை வாக்குப்பதிவு: ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து விமானக் கட்டணமும் உயர்வு!

தமிழகத் தேர்தலையொட்டி விமானக் கட்டணம் உயந்துள்ளது பற்றி...

News image

கோப்புப் படம் - IANS

Updated On :22 ஏப்ரல் 2026, 5:14 am

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை(ஏப். 23) நடைபெறுகிறது.

இதையொட்டி வெளியூர்களில் வேலை செய்வோர், வாக்களிக்கும்பொருட்டு சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.

அரசு சார்பில் இதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது. இதற்கான புகார் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விமானக் கட்டணமும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான விமானக் கட்டணம் ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 4,000 - ரூ. 5,000 வரை இருக்கும் நிலையில் தற்போது ரூ. 14,000 வரை உயர்ந்துள்ளது.

தூத்துக்குடிக்கு சாதாரண நாள்களில் ரூ. 5,000 கட்டணம் இருக்கும் நிலையில் ரூ. 17,000 - ரூ. 21,000 வரை உயர்ந்துள்ளது.

இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Summary

Flight fare increased due to tamilnadu election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.