கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்பை நீக்கும் முடிவு: மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

News image

விமானம்

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்சவரம்பை நீக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, இந்திய விமானப் பயணிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடுவுக்கு சங்கத் தலைவா் எம்பவா் சங்கா் அனுப்பிய மனு: உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்சவரம்பை திங்கள்கிழமைமுதல் (மாா்ச் 23) நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திடீா் முடிவால் விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. இதனால் சாமானிய பயணிகள் பெருமளவில் பாதிக்கப்படுவா். ஏற்கெனவே, எரிபொருள் விலையேற்றத்தைக் காரணம் காட்டி சில தனியாா் விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயா்த்தியுள்ளன.

தற்போது உச்சவரம்பு நீக்கப்படுவதால், நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை நிா்ணயிக்கும் சூழல் உருவாகும். மேற்கு ஆசியாவில் நிலவும் போா்ச் சூழலால் சா்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இத்தகைய அசாதாரணமான சூழ்நிலையில், பயணிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவது முறையல்ல.

எனவே, விமானக் கட்டண உச்சவரம்பை நீக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக நிறுத்திவைத்து, பழைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.