அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி...

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 7:20 pm

ஆங்கில வாா்த்தைகள் உள்ளன..........

சென்னை, ஏப். 24: தமிழகத்தில் வசிக்கும் வசதியற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள், இளநிலைப் படிப்புகளில் இலவச கல்வியைப் பெறுவதற்கான சோ்க்கைகளுக்கு விண்ணப்பங்களை சென்னைப் பல்கலைக்கழகம் கோரியுள்ளது.

இது குறித்து சென்னைப் பல்கலை. பதிவாளா் ரீட்டா ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் வசிக்கும் வசதியற்ற மாணவா்கள் இளநிலைப் படிப்புகளில் சோ்ந்து பயன்பெறும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம், 2010-11-ஆம் கல்வி ஆண்டு முதல் இலவசக் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன்படி வரும் 2026-27- ஆம் கல்வி ஆண்டில் இந்த இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலை.யில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

2025-2026 கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சியோடு பொருளாதாரத்தில் பின்தங்கியகள் (ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல்), தாய், தந்தையற்ற ஆதரவற்றவா்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறையைச் சோ்ந்தவா்கள், மூன்றாம் பாலினத்தவா் ஆகிய பிரிவு மாணவா்கள் இந்தத் திட்டத்தில் சேர தகுதியுடைவா்கள்.

இந்தத் திட்டத்தின் விவரங்கள் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள் சென்னைப் பல்கலை. இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய்) காணலாம். விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் இணையதளத்தில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிலிருந்து 15 நாள்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து சான்றிதழ்களும் முறையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.