தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

தமிழகத்தில் வாக்கு சதவிகித அதிகரிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர்தான் காரணம் என்பது நகைச்சுவையாக இருப்பதாக திமுக நிர்வாகி சரவணா அண்ணாதுரை பேச்சு

News image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 2:20 am

தமிழகத்தில் வாக்கு சதவிகித அதிகரிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர்தான் காரணம் என்பது நகைச்சுவையாக இருப்பதாக திமுக நிர்வாகி சரவணா அண்ணாதுரை பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளருடன் திமுக செய்தித் தொடர்பாளர் சரவணா அண்ணாதுரை பேசுகையில், வாக்காளர்கள் குறைக்கப்பட்டதால், வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது ஒரு சாதாரண அடிப்படைக் கணக்குதான்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்காளர்களின் எண்ணிக்கையை நீங்கள் (தேர்தல் ஆணையம்) குறைத்தீர்கள். ஆனால், இப்போது, இந்த வாக்கு சதவிகிதத்தைப் பாருங்கள் என்று ஆச்சரியமாகக் கூறுகிறீர்கள்.

சிலர் கூறுவதுபோல, இது முன்னெப்போதும் இல்லாத ஒன்று அல்ல.

ஒவ்வொரு தேர்தலின்போது 40 லட்சம் முதல் 50 லட்சம் வரையில் வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். இது 2001 தேர்தலிலிருந்தே நடைபெற்று வருகிறது.

2001 தேர்தலில் 4.74 கோடி வாக்காளர்களில் 2.80 கோடி பேர் வாக்களித்தனர். 2006-ல் 3.28 கோடியும், 2011-ல் 3.68 கோடியும், 2016-ல் 4.32 கோடியும், 2021-ல் 4.58 கோடி வாக்காளர்களும் வாக்களித்தனர்.

ஆனால், இந்த வாக்கு சதவிகித அதிகரிப்புக்கு தலைமைத் தேர்தல் ஆணையர்தான் காரணம் என அவரே பொறுப்பேற்றுக் கொள்ள முயற்சிக்கிறார். இதுதான் மிகப்பெரிய நகைச்சுவை என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வியாழக்கிழமையில் (ஏப். 23) ஒரே கட்டமாக காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணியளவில் முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 84.69 சதவிகித வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது.

Summary

The Chief Election Commissioner is trying to take credit for Higher Vote Percentage, which is the biggest joke: DMK Leader Saravana Annadurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.